CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Monday, February 2, 2009

How the DMK will observe the death anniversary of Periyar?

A ``rationale, secular and anti-communal'' Dravida Munnetra Kazhagam (DMK) has now taken the religious path to reform the society (!).
The party has announced that it would organise special poojas in view of the death anniversary of its founder and former Chief Minister C N Annadurai in as many as 31 temples in Chennai. And almost all the front-ranking ministers would participate in the poojas while Karunanidhi's son M K Stalin would preside over the poojas at Chithiputhi Vinayagar temple in Royapettah.
We may not see it as a logical conclusion of the gradual deviation and dilution of the DMK's `rational' thinking or the party's prayer to the God to save its Government from the present politcal crisis, particularly in connection with the killings Sri Lankan Tamils or to appease the God believers in view of the forthcoming Parliament elections.
But the question is how the party is going to observe the death anniversary of its political mentor E V R Periyar?
No wonder, the party, under the able leadership of ``atheist'' Karunanidhi, may organise fire-walks in all temples in Tamil Nadu to `uphold' the principles of Periyar.

Tuesday, January 13, 2009

பிச்சை எடுப்பதை தொழிலாக அங்கீகரித்துவிட்டால் என்ன?

பணத்துக்காக செய்யப்படும் பாலியலை (விபச்சாரத்தை) ஒரு தொழிலாக அரசாங்கம் அங்கீகரிக்கவேண்டும் என்று பல்ர் குரலெழுப்புகிறார்கள் (முன்னர், `விலைமாதர்கள்' எனப்பட்ட வார்த்தைப் பிரயோகம் தற்போது `பாலியல் தொழிலாளர்கள்' _ Commercial Sex Workers _ என்று கிட்டத்தட்ட முற்றிலுமாகவே மாற்றப்பட்டும் விட்டது ).

விபச்சாரத்தைத் தொழிலாக அங்கீகரிக்கவேண்டும் என்று கோருகிறவர்கள் விபச்சாரத்தில் ஈடுபடுகிறவர்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதாகவோ அல்லது சீர்திருத்துவதாகவோ எண்ணிக்கொண்டு உண்மையில் அவர்களது வாழ்க்கையை எதிர்திசையில் இழுக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள் தன் வீட்டுப் பெண்ணாக இருந்தால் அவர்கள் இப்படிப்பட்ட ஒரு கோரிக்கையை வைப்பார்களா?

விபச்சாரம் ஒரு தொழிலாகவே செய்யப்படுகிறது என்பதே முதலில் வேதனைக்குரிய விஷயம், சமூக சீர்கேட்டின் அடையாளம். அதை சட்டப்படியாகவே ஒரு தொழிலாக அங்கீகரித்துவிடவேண்டும் என்ற கோரிக்கை விபச்சாரத்தில் (வாழ வழியின்றியோ அல்லது ஏமாற்றப்பட்டோ அல்லது பெருமளவில் பணம் சம்பாதிக்க எண்ணியோ எதுவாக இருந்தாலும்) ஈடுபடும் பெண்களை மேலும் இழிவுபடுத்துவதாகவே அமைகிறது.

விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்கள்தான் மற்ற எல்லோரை விடவும் அதிகமாக பணம் சம்பாதிக்கிறார்கள் என்று பேசும் `அறிவு ஜீவிகளும்' இருக்கத்தான் செய்கிறார்கள். விபச்சாரம் செய்து எளிதில் பணம் சம்பாதித்து விட வேண்டும் என்று எண்ணி வந்தாலும் அது ஒரு சமூகத்துக்கு கௌரவமா? என்று அந்த `மேதாவிகள்' சிந்திப்பதில்லை.

விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களே கூடத் தங்களைப் பாலியல் தொழிலாளர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோருகிறார்களே என்றும் பல `புத்திமான்கள்' கேட்கிறார்கள். `உள்ள நிலையும் பறிபோய்விடப் போகிறதே' என்ற அச்சத்தில் அப்பெண்கள் எழுப்பும் கூக்குரலை வைத்துத் தங்கள் நிலையை அவர்கள் நியாயப்படுத்திக் கொள்வதாகக் கூற முடியுமா?

ஒரு வாதத்துக்கே, விபச்சாரத்தைத் தொழிலாக அங்கீகரிப்பதாக எடுத்துக் கொள்வோம். அப்படியானால், குழந்தைத் தொழிலாளர் முறை, பிச்சை எடுப்பது போன்றவற்றை என்ன செய்வது? அவற்றையும் தொழில்களாக அங்கீகரித்துவிடலாமா?

Tuesday, December 9, 2008

எது மதசார்பின்மை?

தீவிரவாதம் பெருகிவரும் இக்காலகட்டத்தில் மதசார்பின்மை பற்றிய கருத்துக்களுக்கான முக்கியத்துவம் அதிகரித்திருப்பதாகத் தோன்றுகிறது.

`எந்த மதத்தையும் சாராதிருத்தல்' என்பதுதான் மதசார்பின்மை என்ற வார்த்தைக்கு இயல்பாகவே உள்ள பொருளாகும். ஆனால் அனைத்து மதங்களையும் சமமாகப் பார்பதுதான் மதசார்பின்மை என்று பெரும்பாலான நேரங்களில் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. மதசார்பின்மை பற்றிய இந்தத் தவறான விளக்கத்தை மதவாத சக்திகள் வேண்டுமென்றே பரப்பவும் செய்கிறார்கள்.

தனிமனிதர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்களாகவும் இருக்கலாம், விருப்பப்படும்போது மதம் மாறலாம் அல்லது எந்த மதத்தையும் சாராதவர்களாகவும் இருக்கலாம்.

ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்துக்கு மதங்கள் இருக்கமுடியாது. அது எந்த மதத்தையும் ஆதரிக்கவும் முடியாது, எதிர்க்கவும் முடியாது. மதம் என்பது தனிமனிதர்கள் சம்மந்தப்பட்ட விஷயம். அவர்களின் மத சுதந்திரத்தில் அரசாங்கம் தலையிடவும் முடியாது. மத நம்பிக்கையை வூக்குவிக்கவும் முடியாது.

ஹஜ் பயணம் போகிற முஸ்லிம்களுக்கு பணம் தருவதோ, இந்து சமயத்துக்கென்று ஒரு அறநிலையததுறையை நிர்வாகம் செய்வதோ, மதமாற்றத்தைத் தடை செய்வதோ ஒரு அரசாங்கத்தின் வேலையில்லை.

`எம்மதமும் சம்மதம்' என்ற பார்வை தனிமனிதர்களிடையே மதநல்லிணக்கத்தை வலுப்படுத்தலாம். ஆனால் பல்வேறு மதங்களை சார்ந்த மக்களை ஆட்சி செய்யும் ஒரு அரசாங்கம் `எம்மதமும் சம்மதம்' என்ற கண்ணோட்டத்தில் செயல்படுமேயானால் அங்கே பெரும்பான்மையான மதம் எதுவோ அதைச்சார்ந்த மதவாத சக்திகளே அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தும் அல்லது ஒட்டு வங்கிக்காக அரசாங்கமே பெரும்பான்மை மதத்திடம் சமரசம் செய்து கொள்ளும். அவ்வாறான போக்குகள் இயல்பாகவே சிறுபான்மை மதத்தினருக்கு எதிராகவே இருக்கும்.

`Secular State' என்று பறைசாற்றிக்கொள்ளும் இந்தியாவிலும் இதுதான் நடக்கிறது, பக்கத்து நாடான பாகிஸ்தானிலும் இதுதான் நடக்கிறது. அந்த வேதனைதான் இந்த விளக்கத்தையே எழுதவைக்கிறது.

இப்படி எழுதுவதைக்கண்டு இந்து தீவிரவாதிகளும், முஸ்லீம் தீவிரவாதிகளும், கிறித்துவத் தீவிரவாதிகளும் ஆத்திரம் கொள்ளலாம். அதுசரி, அவர்கள் ஆத்திரம் ொள்ளாவிட்டால்தான் ஆச்சரியம் !

Friday, November 21, 2008

பெண்கள் சிகரெட் பிடிப்பது தவறா?

``ஆண்கள் சிகரெட் பிடிக்கும்போது நாங்களும் சிகரெட் பிடித்தால் என்ன தவறு?'' என்று பல பெண்கள் கேட்பதை பார்த்திருக்கிறேன்.

ஆண்களுக்கு சரிநிகர்சமானமாக பெண்கள் வாழவேண்டும் என்பது மிகச்சரியானதுதான். ஆனால் அதே சமயத்தில், கிணற்றில் ஒரு ஆண் விழப்போனால் நானும் அதையே செய்வேன் என்று சொல்வது சரியாக இருக்குமா? யார் தொட்டாலும் நெருப்பு சுடத்தான் செய்யும். அதுபோலத்தானே சிகரெட் பழக்கமும்.

உடல் நலத்தை பாதிக்கும் ஒரு பழக்கம் தன்னிடத்தில் இல்லாதபோது, அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, அதைத் தக்கவைத்துக்கொள்வதுதானே சரி ?

Tuesday, October 28, 2008

Sunday, October 26, 2008

Wednesday, October 22, 2008

IS RESERVATION FOR WOMEN A REAL SOLUTION?


Many people and political parties favour and agitate for 33.33 per cent reservation for women in State legislatures and the Parliament. I feel the reservation is only like putting medicine to a wound as a temporary measure but will not lead to real empowerment of women.

Though, it had helped some women here and there to become concious about the ruling class' economic onslaught against the people and social, cultural and political degradition, reservation has degraded a large number of women in local bodies in Tamil Nadu as we are witnessing they are literally being represented by their husbands or other male members of the family.

I feel, those who are really interested in women development should advocate and organise democratic movements among women on burning social issues which will truely make them conscious about the society and as make politicians in a real sense.

All right, if at all we need reservation for women, I don’t understand why it should be only 33.33 per cent? Why not 50 per cent? And really, what is the rationale behind the 33.33 per cent?